பல வருடங்களுக்கு முன்பு இந்த உலகம் முழுவதும் காடுகளாகத் தான் இருந்தன. எல்லா விலங்குகளும் காட்டில் முரட்டுத் தனமாகவே திரிந்தன. நாய், குதிரை, மாடு, ஆடு எல்லாமே அப்படித்தான் இருந்தன. இருப்பதிலேயே பூனை மிகவும் முரட்டுத்தனமாக இருந்தது. தன் விருப்பம்போல் நடக்கும் பூனை, காட்டில் தான் விரும்பியதை எல்லாம் செய்து, விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று வந்தது.
மனிதர்களும்கூடக் காட்டில்தான் வாழ்ந்தார்கள். விலங்குகளைப் போலவே ஈரத்தரையில் படுத்தும் சமைக்காத உணவை உண்டும் வாழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு பெண் முதன் முதலில் குகையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். மணலைக் கொண்டுவந்து கொட்டி, குகைத் தரையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்