கதை: டிட்டோவுக்கு இரண்டு; சாமுக்கு ஒன்று

By ஏ.ஆர்.முருகேசன்

அப்பா தின்பண்டங்களை வாங்கிவரும் போதெல்லாம் வழக்கமாக நடப்பதுதான்.
“நீங்க டிட்டோவுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கறீங்க” என்றார் அம்மா.
அப்பாவுக்கு அம்மா சொல்லும் விஷயம் புரிந்தாலும் அமைதியாக இருந்தார்.
“அவனுக்கு மட்டும் ஏன் ரெண்டு லட்டு கொடுத்தீங்க?”
“சின்னப் பிள்ளையா இருக்கும்போதே நாமதானே பழக்கிவிட்டோம்?”
“அது சாம் பிறக்கிறவரைக்கும் சரி. இப்பவும் அப்படியே நடந்துக்கணுமா?”
“பழக்கத்தை உடனே மாத்த முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாத்தணும்.”
“சரிதான். டிட்டோ ரொம்ப காலம் கழிச்சுப் பிறந்தவன். அதனால நாம ரெண்டு பேருமே அவன்மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். டிட்டோ பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு சாம் பிறந்ததுக்கு அப்புறம், ரெண்டு பேரையும் சமமாகப் பார்க்கறதுதானே நியாயம்?”
“இதைத் தவிர எல்லாத்துலயும் ரெண்டு பேரையும் சமமாகத்தானே நடத்தறேன்?”
“அப்புறம் ஏன் டிட்டோவுக்கு மட்டும் ரெண்டு லட்டைக் கொடுத்திருக்கீங்க? சாமுக்கும் ரெண்டு லட்டைக் கொடுக்கலாமே?”
“டிட்டோ கோவிச்சுக்குவான். அப்புறம் அவன் நாலு லட்டு கேட்பான்” என்று சிரித்தார் அப்பா.
முன்னறையில் டிட்டோவும் சாமும் லட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
டிட்டோ ஒரு லட்டை வேகமாகச் சாப்பிட்டு முடித்தான். இன்னொரு லட்டை சாமுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டான். சாம் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு லட்டை மெதுவாகச் சாப்பிட்டான்.
“ஒரு லட்டை எவ்வளவு நேரம் சாப்பிடுவே? நான் ரெண்டு லட்டையும் எவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டேன்னு பார்த்தீயா?” என்று சாமைப் பார்த்துக் கேட்டான் டிட்டோ.
சாம் எந்த உணவையும் மெதுவாகத்தான் உண்பான். ருசித்துச் சாப்பிடுவான்.
“மெதுவாக மென்று சாப்பிட்டால்தான்
சீக்கிரம் ஜீரணம் ஆகும்னு அம்மா சொன்னது உனக்கு மறந்து போச்சா? உன் லட்டை யாரும் தட்டிப்பறிக்கப் போறாங்களா?” என்று டிட்டோவைப் பார்த்துக் கேட்டான் சாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE