மெட்ராஸ் பாஷை என்று குறிப்பிடப்படும் சென்னை வட்டார வழக்கில் மிகக் கடுமையான வசைச் சொல் ‘வூட்ல சொல்லிகினு வன்ட்டியா’. அக்கறை தொனிக்கும் சொற்களாக ஒலித்தாலும், உண்மையில் இது கிண்டல் நிறைந்தது. ‘வீட்டுக்குத் திரும்பி வர மாட்டேன்’ என்று உன் வீட்டில் உள்ளோரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா?’ என்பதே இதன் பொருள். நடந்து செல்பவர், வாகனம் ஓட்டிச் செல்பவர் என யாராக இருந்தாலும் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாகனத்தின் குறுக்கே செல்பவர் மீது இந்த வசைமொழி வீசப்படும். இதற்கு அடுத்தபடியான வசைச் சொல் ‘புறம்போக்கு’. அனைவருக்கும் பொதுவான நிலம் என்பதைக் குறிப்பதற்கான பழைய தமிழ் சொல்லான இது, இப்போது எதற்கும் பயனற்ற யாரையும் குறிப்பதற்கான சொல்லாக மருவிவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்