கிராமத்து அத்தியாயம் - 29: காதல்

By பாரததேவி

இன்னைக்கோடு மூன்று நாளாக எதுவும் சாப்பிடாமல் வயிற்றுப் பசியோடு படுத்திருந்தான் காந்தருவன். அவன் ஆத்தா முத்துமுடிக்கு மகன் பட்டினி கிடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகன் பக்கத்தில் வந்து, “எய்யா, என் ராசாவில்ல... சொன்னா கேளுய்யா... கொஞ்சம் சாப்பிடு” என்று கெஞ்சினாள். காந்தருவனும், “நீயும் அய்யனும் வெயிலிய எனக்குக் கட்டிவைக்கேன்னு சொல்லுங்க. நான் இப்பவே எந்திரிச்சி சாப்பிடுதேன்” என்றான். முத்துமுடி எதுவும் பேசாமல் நடந்தாள்.

அவள் புருசன் கோலனுக்கும் இவளுக்கு அண்ணனாக வேண்டிய மெய்யடியானுக்கும் நாலு வருசங்களுக்கு முன்னால் வந்த சண்டையில் தீத்தரை தண்ணித்தரையாகிப் போனது. யாரும் நேருக்கு நேர் நின்னு பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு சண்டை. ஆனால், காந்தருவன் இளவட்டம் ஆகி காடு, கரை என்று சுற்றிக்கொண்டிருந்ததில் மெய்யடியான் மகளான வெயிலிக்கும் இவனுக்கும் எப்படியோ பார்வைகள் மோதியதில் பழக்கம் ஆகிப்போனது. இருவரும் குளத்துத் தண்ணிக் கெண்டை மீனாகத் துள்ளாட்டம் போட்டுக்கொண்டு வெள்ளாமை அடர்ந்த காடுகளிலும் கரைகளிலும் கொஞ்சிக் குலாவினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE