மெலடிகளால் வசீகரிக்கும் சக்திஸ்ரீ

By கார்த்திகா ராஜேந்திரன்

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சமே நெஞ்சமே..’ பாடல்தான் திரும்பும் இடமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மனதை வருடும் இப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க, விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர். 2012இல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் ‘நெஞ்சுக்குள்ள..’ பாடலைப் பாடியதன் மூலம் கவனிக்கப்பட்டவர் சக்திஸ்ரீ . கட்டிட வடிவமைப்பாளர், பாடகர், சுயாதீன இசைக் கலைஞர், பாடல் தயாரிப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர் எனப் பல முகங்களைக் கொண்டவர் சக்திஸ்ரீ.

இசையும் வடிவமைப்பும்: கட்டிட வடிவமைப்பு சார்ந்த படிப்பைப் படிக்கும்போதே திரைப்படங்களில் பாட தொடங்கிவிட்டார் சக்தி. இசை ஒரு பக்கம், வடிவமைப்பு ஒரு பக்கம் என ஆர்வத்துடன் இரட்டைச் சவாரி செய்து வந்தார். இப்போதும் அந்தப் பணியை விடவில்லை. ஒரே நேரத்தில் இது எப்படிச் சாத்தியமாகிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE