கடன் வழங்கலில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்!: கரூர் வைஸ்யா வங்கி சிஇஓ ரமேஷ் பாபு பேட்டி

By முகம்மது ரியாஸ்

கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் ஜவுளி தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடன் உதவி வழங்கும் நோக்கில் 1916-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது கரூர் வைஸ்யா வங்கி . இன்று அதன் மொத்த வணிகம் ரூ.1.40 லட்சம் கோடி. இதுவரையில் இல்லாத அளவில் சென்ற நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,100 கோடியைத் தாண்டியுள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ரமேஷ் பாபு 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகான இரண்டு ஆண்டுகளில் அவ்வங்கியின் செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவருடனான உரையாடலிலிருந்து...

அமெரிக்காவில் சமீபத்தில் மூன்று வங்கிகள் நிதி நெருக்கடியால் வீழ்ச்சியடைந்தன. அதன் தாக்கம் இந்திய வங்கித் துறையில் பெரிய அளவில் இல்லையென்றபோதிலும், வங்கிகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் மக்களிடம் தீவிரமடைந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி எந்த அளவுக்கு அதன் கடன் வழங்கலில் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE