சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2013இல் இதே காலகட்டத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதோடு சரி. அதன்பிறகு நடத்தப்பட்ட ஐசிசி தொடர்களில் இந்திய அணி பெரும்பாலான முறை அரையிறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லாமல் திரும்பும் சோகம் தொடர்கிறது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்ப என்ன காரணம்?
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா முதன் முறையாகக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆக, 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டி20 ஐசிசி உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 4 விதமான தொடர்களிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றிருக்கிறது. 2021, 2023 என இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றும் இந்தியா தோல்வியடைந்தது ஏமாற்றமே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்