பூவுலகு இன்று 2: காலநிலை மாற்றம் - கலையின் கடப்பாடு என்ன?

By சு.அருண் பிரசாத்

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் விளைவும் தாக்கமும் ஒட்டுமொத்த உலகுக்குமானதாக இருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவு, மனிதனின் இருப்பு குறித்த ஆதாரக் கேள்வியை வலுவாக எழுப்பியது; இருத்தலியல் [Existentialism] சார்ந்த விசாரணைகள் தத்துவத் துறையில் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டன. மனிதனால் விளைந்த பேரழிவு, வரலாற்றில் மனிதகுலத்தை எங்கே அழைத்து வந்திருக்கிறது என்கிற கேள்விக்கு விடைதேடும் நிர்ப்பந்தம் கலைஞர்களுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலை-இலக்கியத் துறை, அதன் எல்லையை விரித்துச் சென்றது.

இரண்டாம் உலகப் போரில் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, இத்தாலி. போரின் சிதிலங்களிலிருந்து மீண்டெழவும் நாட்டை மறுகட்டமைத்துப் ‘பொருளாதார அதிசயத்தை (‘Economic miracle’) நிகழ்த்தவும் பெட்ரோகெமிக்கல் துறையிடம் இத்தாலி தன்னை ஒப்படைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE