உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்த பல்கலை. மானியக்குழு எனப்படும் யூ.ஜி.சி. சார்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு ஃபெல்லோஷிப் வழங்குகிறார்கள். முதல் 2 ஆண்டுகள் ஜெ.ஆர்.எப். ஃபெல்லோஷிப்பாக மாதம் ரூ.16 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எஸ்.ஆர்.எப். ஃபெல்லோஷிப்பாக மாதம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும்.
இதுதவிர, படிப்பு வகையில் எதிர்பாராமல் ஏற்படும் செலவினங்களுக்காகக் கலைப் படிப்புகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரமும் (வருடத்துக்கு) அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.20,500-மும் இதேபோல், அறிவியல், பொறியியல்,தொழில்நுட்பப் படிப்புகளுக்கு முறையே ரூ.12 ஆயிரமும், ரூ.25 ஆயிரமும் பெறலாம். மேலும், உதவியாளருக்கான உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் தனியாகக் கிடைக்கும்.
2014-15 ஆம் கல்வி ஆண்டில் இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று யூஜிசி அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளியாகப் பிறந்துவிட்டோமே எனக் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு இத்தகைய கல்வி உதவித் தொகைகளைப் பெற்றுப் படித்து முன்னேற வேண்டிய காலம் இது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
18 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago