ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியுடன் சிஎஸ்கே அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு ஆனந்த கண்ணீருடன் ஓய்வு பெற்றார். அவர் கூறும்போது, “இது ஒரு விசித்திர முடிவு. எனது கடைசி ஆட்டத்தில் இதற்கு மேல் எதையும் நான் கேட்டிருக்க முடியாது. சிறந்த அணிகளில் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டசாலி. என் வாழ்நாள் முழுவதும் என்னால் சிரிக்க முடியும்” என்றார்.