இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து 492 ரன் குவிப்பு!

By செய்திப்பிரிவு

காலே: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 492 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அயர்லாந்து 1998-ம் ஆண்டு டப்ளின் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் 339 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

காலே டெஸ்ட் போட்டியில் லார்கன் டக்கர் 106 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், கர்திஸ் கேம்பர் 229 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது. நிஷான் மதுஷங்கா 41, கேப்டன் திமுத் கருணரத்னே 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE