IPL | ‘சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ - டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்!

By செய்திப்பிரிவு

டெல்லி: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிதொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்திருந்தது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டேவிட் வார்னர் கூறியதாவது.

ஆடுகளத்தில் பந்துகள் நான் எதிர்பார்த்ததை விட அதிகம் ஸ்விங் ஆனது. பவர்பிளேவில் விக்கெட்களை இழந்தால் சிரமமாக இருக்கும். குஜராத் அணியினர் சூழ்நிலையை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு காட்டினர். இது எங்களுக்கு சிறந்த பாடம். சொந்த மைதானத்தில் இன்னும் 6 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அதில் சிறப்பாக செயல்ட முயற்சிப்போம். குஜராத் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

நாங்கள் ஆட்டத்துக்குள் இருந்தோம். ஆனால் சாய் சுதர்ஷன் சிறப்பாக பேட்டிங் செய்தார், டேவிட் மில்லர் வழக்கமாக எதை செய்வாரோ அதை செய்து ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துச் சென்றார். ஆடுகளம் மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் அக்சர் படேலை பந்து வீச்சில் பயன்படுத்தவில்லை. இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE