வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி

By செய்திப்பிரிவு

சிட்டோகிராம்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வதுஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்டோகிராமில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 75, முஷ்பிகுர் ரகிம் 70 ரன்கள் எடுத்தனர்.

247 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38, ஃபில் சால்ட் 35, கிறிஸ் வோக்ஸ் 34 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்களைவீழ்த்தினார்.

50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. முதல் இரு போட்டியிலும் இங்கிலாந்து அணிவெற்றி பெற்றிருந்ததால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 கைப்பற்றி கோப்பையை வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்