டேபிள் டென்னிஸ்: 27 அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று அணிகளிடையிலான ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக அணிகளிடையிலான ஆட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மீண்டும் அணிகளிடையிலான ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. அணிகள் பிரிவில் மொத்தம் 27 அணிகள் களமிறங்கவுள்ளன.

சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணியாகக் கருதப்படும் மேற்கு வங்க அணி 1-வது குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் மேற்கு வங்க அணிக்கு சவால் அளிக்கும் வகையில் மணிப்பூர் அணி விளையாடி வருகிறது.

தமிழக அணி 6-வது குரூப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருண் கணேஷ், பி.பி.அபிநந்த், பிரயேஷ் ராஜ் சுரேஷ், தருண் சண்முகம் ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.

அணிகள் விவரம்: குரூப் 1: மேற்கு வங்கம், ஒடிசா, இமாச்சல் பிரதேசம், குரூப் 2: உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டாமன் அன்ட் டையூ, குரூப் 3: டெல்லி, சண்டிகர், ஆந்திரா, குரூப் 4: மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், குரூப் 5: மணிப்பூர், ஹரியாணா, பிஹார், குரூப் 6: தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், குரூப் 7: அசாம், தெலங்கானா, புதுச்சேரி, ஜம்மு- காஷ்மீர், குரூப் 8: கர்நாடகா, குஜராத், கோவா, ராஜஸ்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்