பாங்காக் ஓபன் சேலஞ்சர் டென்னிஸில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, மைனேனி ஜோடி சாம்பியன்

By செய்திப்பிரிவு

நந்தபுரி: பாங்காக் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள நந்தபுரியில் நடைபெற்ற இந்தத் தொடரில் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடியானது இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ருங்கட், ஆஸ்திரேலியாவின் அகிரா சாண்டிலன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி 2-6, 7-6 (7-6), 14-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்த ஜோடி ஒன்றாக இணைந்து வெல்லும் 6-வது ஏடிபி சேலஞ்சர் தொடர் இதுவாகும். இதன் மூலம் இரட்டையர் பிரிவுதரவரிசையில் யூகி பாம்ப்ரி 90-வது இடத்தையும், சாகேத் மைனேனி 74-வது இடத்துக்கும் முன்னேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்