சிட்னி: ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகளிடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
4-வது நாள் ஆட்டத்தின்போது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு149 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
220 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 2 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 5-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago