CWG 2022 | லான் பவுல்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு உறுதியானது பதக்கம்: விளையாடும் முறை எப்படி?

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் விளையாட்டு பிரிவில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்த விளையாட்டின் நால்வர் பார்மெட் மகளிர் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

இன்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் 1-6 என்ற நிலையில் பின்தங்கி இருந்தது. போட்டியில் முடிவில் 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் நால்வர் அணி. இதுதான் இந்திய மகளிர் அணி (நால்வர் பார்மெட்) விளையாட உள்ள முதல் இறுதிப் போட்டி.

அரையிறுதியில் ஐந்தாவது எண்டில் (சுற்று) இருந்து இந்திய அணி புள்ளிகளை பெற தொடங்கியது. இறுதி வரை இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. இருப்பினும் கடைசி மூன்று எண்டில் உலகத்தின் நம்பர் 2 அணியாக உள்ள நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா. அதன் மூலம் வெற்றியும், பதக்கமும் இப்போது உறுதியாகி உள்ளது.

இந்திய வீராங்கனைகள் லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் இந்தியாவிற்காக விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா வெள்ளி வெல்வது உறுதியாகி உள்ளது. இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்க போகும் முதல் பதக்கம் இது என சொல்லப்படுகிறது. நாளை மாலை 04.15 மணி அளவில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

லான் பவுல்ஸ்: ரூல்ஸ் & கண்டிஷன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE