செஸ் ஒலிம்பியாட் 2022-ல் கவனம் ஈர்க்கும் 8 வயது வீராங்கனை

By செய்திப்பிரிவு

மகளிர் பிரிவு 2 வது சுற்றில் பாலஸ்தீனம் அணி 4-0 என்ற கணக்கில் கொமொரோஸ் அணியை வீழ்த்தியது. இந்த அணியில் இடம்பிடித்துள்ள ராண்டா சேடருக்கு 8 வயதே ஆகிறது. இதன் மூலம் அவர், இந்த செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தார்.

கொமொரோஸ் அணியை வீழ்த்திய பின்னர் தனது அணியுடன் உற்சாக போஸ் கொடுக்கிறார் ராண்டா சேடர்.

3-ம் வகுப்பு மாணவியான அவர், தான் செஸ் போட்டியை மிகவும் நேசிப்பதாகவும், வருங்காலத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE