செஸ் ஒலிம்பியாட் 2022: 8 வயதே ஆன ராண்டா

By செய்திப்பிரிவு

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த 8 வயதான ராண்டா சேடர்.

இவரது தந்தை, 5 வயதிலிருந்தே ராண்டா சேடருக்கு சதுரங்கம் கற்பிக்கத் தொடங்கினார், அதுவே விரைவில் அவளுடைய வாழ்க்கையாக மாறியது. ராண்டா 1442 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான அவர், உலகத் தரவரிசையில் 98388-வது இடம் வகிக்கிறார்.

ராண்டா சேடர் பல்வேறு தொடர்களில் பங்கேற்றுள்ளார். பாலஸ்தீனத்தில் நடைபெற்ற மகளிருக்கான சாம்பியன்ஷிப்பில் ராண்டா சேடர் 2-வது இடம் பிடித்ததை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராண்டா சேடரின் லட்சியம் மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE