புனே: சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து 173 ரன்கள் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. கோலி, டூப்ளசி, லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதர் அசத்தலாக பேட் செய்தனர்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
டூப்ளசி, 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து மேக்ஸ்வெல் மற்றும் கோலி அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ரஜத் பட்டிதர் மற்றும் மஹிபால் லோம்ரோர் 44 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு முக்கிய கூட்டணியாக அமைந்தது. 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார் பட்டிதர். 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார் லோம்ரோர்.
தினேஷ் கார்த்திக், 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது பெங்களூரு. சென்னை அணிக்காக மஹீஷ் தீக்ஷனா (3 விக்கெட்), மொயின் அலி (2 விக்கெட்) மற்றும் பிரிட்டோரியஸ் (1 விக்கெட்) கைப்பற்றி இருந்தனர்.
» IPL 2022 | பெங்களூரு அணிக்கு எதிராக சென்னையின் கை சற்று ஓங்கியிருக்கும் - இம்ரான் தாஹிர்
» அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார் கவாஸ்கர்
சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற 174 ரன்கள் தேவை. தற்போது சென்னை அந்த இலக்கை விரட்டி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago