மாநில மகளிர் கூடைப்பந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி சாம்பியன்

மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான அன்னை தெரசா கோப்பைக்கான மகளிர் கூடைப்பந்து போட்டி கடந்த 14-ம்தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 8 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.

சூப்பர் லீக் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கழக கல்லூரி அணி 73-54என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும், 77-48 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியையும், 87-46 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியையும் வென்று அன்னை தெரசா கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி அணி 76-75 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியையும்,58-36 என்ற புள்ளிகள் கணக்கில்திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும் வென்று 2-வது இடம் பிடித்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீராங்கனைகளுக்கு ஜமால் முகமது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜிமுதீன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்