சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 7-வது இடத்தில் உள்ள கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-21, 19-21 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சவுரப் வர்மா அரை இறுதி சுற்றில் கால் பதித்தார். உலக தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள சவுரப் வர்மா கால் இறுதி சுற்றில் 41-ம் நிலை வீரரான தாய்லாந்தின் குன்லவுத் விட்டிட்சரனை எதிர்த்து விளையாடினார்.
இதில் சவுரப் வர்மா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. அரை இறுதியில் 44-ம் நிலை வீரரான கொரியாவின் ஹீயோ குவாங் ஹீயுடன் மோதுகிறார் சவுரப் வர்மா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago