1996 உலகக் கோப்பை: குட்டித் தீவின் எழுச்சி

By அரவிந்தன்

சச்சின் டெண்டுல்கரும் அமீர் சோஹைலும் இன்னிங்ஸைத் தொடங்கினால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு அதிசயம் 1996-ல் அரங்கேறியது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்திய, பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் கொண்ட அணி இலங்கையை எதிர்த்து விளையாடி வெற்றிபெற்றது.

1987-க்குப் பிறகு 1996-ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 1996-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மறுத்துவிட்டன.

தொடர் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அங்கே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத் தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இலங்கை செல்ல இந்த இரு அணிகளும் மறுத்துவிட்டன.

அந்த இரு போட்டிகள் நடக் காமல் போனதால் ஏற்பட்ட நஷ் டத்தை ஈடுகட்ட சிறப்புக் காட்சிப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டது. உலகக் கோப்பையை நடத்திய மூன்று நாடுகளும் அதில் கலந்துகொண்டன. இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்த அணி இலங்கையை எதிர்கொண்டு ஆடி வென்றது. இதில்தான் சச்சி னும் சோஹைலும் தொடக்க ஜோடி யாகக் களம் இறங்கினார்கள்.

உலகக் கோப்பையில் தன் முதல் ஆட்டத்தில் களம் இறங் காமலேயே வெற்றிப் புள்ளிகளைப் பெற்ற இலங்கை, நேரடியாக காலிறுதியில் களம் இறங்கிய பிறகு தன் அதிரடி ஆட்டத்தால் வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கடைசியில் கோப்பையையும் வென்றது. இந்தத் தொடரில் இலங்கை ஒரு போட்டியில்கூடத் தோற்கவில்லை.

மாற்றங்களும் புதுமைகளும்

முதல் 15 ஓவர்களில் களத் தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள் 1992 தொடரிலேயே அறிமுகப்படுத் தப்பட்டன. ஆனால் நியூஸிலாந் தின் கிரேட்பேட்சைத் தவிர யாரும் இதை அவ்வளவாகப் பயன்படுத் திக்கொள்ளவில்லை. 1996-ல் இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன் படுத்திக்கொள்வது தனிக் கலையாக வளர்ச்சி பெற்றிருந்தது.

எல்லைக் கோட்டுக்கு அருகே அதிகம் பேர் நிற்க இடம் தராத இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பந்துகளைத் தூக்கி அடிக் கும் திறன் கொண்டவர்கள் போட்டி களின் முடிவுகளை நிர்ணயிக்க ஆரம்பித்தார்கள். இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் இதில் சிறந்து விளங்கின. இதில் தனி முத்திரை பதித்தவர் இலங்கையின் சனத் ஜெயசூர்யா.

சனத் ஜெயசூர்யாவின் அதிரடி, போட்டி நடக்கும் முறையையே மாற்றி எழுதியது. அப்போதெல் லாம் முதல் 15 ஓவர்களில் 60 70 ரன் எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று கருதப்படும். சனத்தும் ரொமேஷ் கலுவிதரணவும் இதை மாற்றினார்கள்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 15 ஓவர் களில் 117, கென்யாவுக்கு எதிரான போட்டியில் 123, இங்கிலாந்துடன் 121 என்று எடுத்து போட்டி ஆடப் படும் முறையை மாற்றினார்கள். இந்த அதிரடிதான் இலங்கையின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். கென்யாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 398-5 அப் போதைய உலக சாதனை. 2006-ல்தான் இது முறியடிக்கப்பட்டது.

களத்தில் முடிவு எடுக்க முடியாதபோது மூன்றாம் நடுவரை அணுகும் ஏற்பாடும் இந்தத் தொடரில்தான் தொடங்கியது.

தலை சுற்றவைத்த முதல் சுற்று

போட்டியில் மொத்தம் 12 அணிகள். இரண்டு பிரிவுகள். முதல் சுற்றில் மொத்தம் 30 ஆட் டங்கள். வலுவற்ற ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர் லாந்து, கென்யா ஆகிய அணி கள் போட்டியிலிருந்து வெளியேற் றப்பட 30 ஆட்டங்களைக் கடக்க வேண்டியதாயிற்று.

இந்தியா, இலங்கை, பாகிஸ் தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள்தான் கால் இறுதிப் போட்டியில் மோதின. இவைதான் மோதும் என்பது அனேகமாக எல் லாருமே கணித்த விஷயம்தான்.

எனவே கால் இறுதியிலிருந்துதான் நிஜமான போட்டிகள் தொடங்கு வதாக ரசிகர்கள் கருதினார்கள். இந்தக் கட்டத்தை எட்ட 30 போட்டிகள் நடத்தப்பட்டன. கென்யா, பங்களாதேஷ் அணிகள் அரிதாக நிகழ்த்தும் ஆச்சரியங்கள் அரங்கேறும் சமயங்கள் தவிர எல்லாப் போட்டித் தொடர்களிலும் இந்த யதார்த்தமே இன்றுவரை தொடர்கிறது.

அணிகளின் ஊர்வலம்

1992-ல் சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரிலும் சிறப்பாக ஆடியது. தனது பிரிவில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் அது வென்றது. ஆனால் கால் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. தட்டுத் தடுமாறிக் கால் இறுதிக்கு வந்த இங்கிலாந்து அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இலங்கையிடம் பலத்த அடி வாங்கி வெளியேறியது. வலுவான ஆஸ்திரேலிய அணி முதல் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. மற்ற எல்லாப் போட்டிகளிலும் வென்று இறுதிக்கு வந்த இந்த அணி இலங்கையிடம் வீழ்ந்தது.

(1996-ல் இந்தியாவின் பயணம்… நாளை)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE