காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், முன்பைவிட வலுவான வீரராக களத்துக்கு திரும்புவார் என முன்னாள் முதல் நிலை வீரரான கார்லஸ் மோயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவ்வப்போது காயங்களை சந்தித்தாலும் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுவிட்டார் நடால். சமீபத்தில் குடல்வால்வு அறுவை சிகிச்சை மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ஸ்டெம் செல் சிகிச்சை பெற்ற நடால், இப்போது பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்பெயினைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரரான கார்லஸ் மோயா கூறுகையில், “நடால் இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர் துரதிர்ஷ்டவசமாக தொடர்ச்சி யாக காயத்தால் பாதிக்கப் பட்டுவிட்டார். ஆனால் அவர் காயத்தால் பாதிக்கப்பட்டபோ தெல்லாம் வலுவான வீரராகவே களம்புகுந்துள்ளார். அதனால் இந்த முறையும் அதில் மாற்றம் இருக்காது. விரைவில் அவர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பார்” என்றார்.
மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்த நடால், கடந்த அக்டோபர் மாதம் 2014 சீசனில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago