2015-ல் சிறப்பாக ஆடுவேன்: சாய்னா நம்பிக்கை

By பிடிஐ

இந்த வருடம் சில போட்டிகளில் ஜெயித்திருந்தாலும் எனக்கு திருப்தியில்லை. அடுத்த வருடம் மேலும் சிறப்பாக ஆடி பல போட்டிகளில் ஜெயிப்பேன் என்று சாய்னா நெவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் 2013-ல் ஒரு போட்டியைக்கூட வெல்லவில்லை. ஆனால் இந்த வருடம் இந்தியா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ், ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் என 3 போட்டிகளை வென்றார். இந்திய அணிக்கு உபர் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் பெற்றுக் கொடுத்தார். 2014-ல் தன்னுடைய வெற்றி, தோல்விகளைப் பற்றி சாய்னா நெவால் கூறும்போது:

“ஒரு வீரர் வெற்றியடையும்போதுதான் அவருடைய முன்னேற்றம் தெரியும். இந்த வருடம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றாலும் எனக்கு திருப்தியில்லை. மேலும் சில போட்டிகளில் வென்றிருக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் நெருங்கி வருவதால் அடுத்த வருடம், 2014-ல் ஆடியதை விடவும் சிறப்பாக ஆடி பல போட்டிகளில் ஜெயிப்பேன்” என்றார்.

சாய்னா, அடுத்ததாக துபாயில் நடைபெறுகிற வேர்ல்ட் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். இப்போட்டி டிசம்பர் 17-21 தேதிகளில் நடைபெறுகிறது. இதுபற்றி சாய்னா கூறும்போது: “இப்போட்டிக்காக நன்றாக தயாராகியுள்ளேன். பேட்மிண்டனில் உள்ள 8 முன்னணி வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டி என்பதால் சிறப்பாக ஆடினால்தான் வெல்லமுடியும். இந்த வருடம் எல்லா இந்திய பேட்மிண்டன் வீரர்களும் நன்றாக ஆடியுள்ளார்கள். பல இளைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பித்துள்ளார்கள். எனவே விரைவில் டாப் 20-ல் பல இந்திய வீரர்கள் இடம்பெற வாய்ப்புண்டு” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்