ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு புவனேஸ்வர் குமார் தேர்வு

ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் சார்லோட்டே எட்வர்ட்ஸ், இலங்கை கேப்டன் மேத்யூஸ் ஆகியோரின் பெயர்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விருதைத் தட்டிச் சென்றுள்ளார்

புவனேஸ்வர் குமார். இந்த விருதைப் பெறும் 3-வது இந்தியர் புவனேஸ்வர் குமார் ஆவார். சச்சின் (2010), தோனி (2013) ஆகியோர் இந்த விருதை வென்ற மற்ற இந்தியர்கள்.

விருது வென்றது குறித்துப் பேசிய புவனேஸ்வர் குமார், “இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தனிப்பட்ட செயல்பாட்டினால் மட்டும் இந்த விருதைப் பெறவில்லை. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக இந்த விருது கிடைத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE