கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதன் எடுத்து விளையாடி வருகிறார்.
இந்தியா 26-வது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
தவனுக்கு பதிலாக காயத்திலிருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா களமிறக்கப்பட்டார். அவர் தற்போது 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கேப்டன் விராட் கோலி 27 ரன்களுடன் விளையாடி வருகிறார். இவரும் சேர்ந்து 13.4 ஓவர்களில் 78 ரன்களைச் சேர்த்து அணியை நிலைப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரஹானே 28 ரன்களில் 6 பவுண்டரிகள் எடுத்து மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
ராயுடு எரங்காவின் அபாரமான, உள்ளே வந்த, பந்துக்கு பவுல்டு ஆனார். இந்திய அணியில் கரன் சர்மா, தவால் குல்கர்னி ஆகியோர் உள்ளனர். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஸ்டூவர்ட் பின்னி உள்ளார். ராபின் உததப்பாவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago