ஐபிஎல் சூதாட்டம் பற்றிய முத்கல் கமிட்டி விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது பற்றியும், அதுபற்றி சீனிவாசன் சாதிக்கும் மவுனம் பற்றியும் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெல்பர்னில் ‘இந்தியா டுடே குழு’-உடன் பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது: “சட்டத்தின் முழு சக்தியும் மெய்யப்பன் மீது இறங்க வேண்டும். முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு, ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பது தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நடந்த பின்பும் சீனிவாசன் மவுனம் சாதிப்பது ஏன்? சூதாட்டம் நடைபெறும் விவகாரம் அவருக்கு தெரிந்திருந்தது என்றால் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நியூசிலாந்து நாட்டில் சூதாட்டத்தை எதிர்த்து புதிய சட்டம் நடைமுறையில் உள்ளது. அதில் குற்றவாளி வீரர்கள் சிறையில் அடைக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அப்படிப்பட்ட சட்டம் தேவை.
இந்தியாவில் நிறைய சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. கருப்புப் பணம் புழங்குகிறது. சூதாட்டத்தை அதிகாரபூர்வமாக பந்தயம் என்பதாக மாற்றினால் அரசின் வருவாயும் கூடும். இப்படிச் செய்தால் சட்டவிரோத சூதாடிகளை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago