பெனால்டியால் தோற்றோம்: மார்கோ மெட்டாரஸி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

போட்டிக்குப் பிறகு செய்தியா ளர்களைச் சந்தித்த சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி, “சில நேரங் களில் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கும்போது அது மோசமான தோல்வி போன்று தெரியும். இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நாங்கள் சிறப்பாக ஆடி னோம். ஆனால் டெல்லிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றிவிட்டது.

அதேநேரத்தில் டெல்லி அணி ஆரம்பம் முதலே அபாரமாகவும், வேகமாகவும் ஆடியதாக நினைக்கிறேன். நாங்களும் சிறப் பாகவே போட்டியைத் தொடங் கினோம். ஆனாலும் தோல்வி யடைந்துவிட்டோம். எனினும் இந்தத் தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும்.

எங்கள் அணி தடுப்பாட்டம் ஆடியதாக மக்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் அணியிலும் இலனோ, பல்வந்த், புருனோ, மென்டோஸா, ரானே போன்ற தாக்குதல் ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். எனினும் இந்த நாள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE