தேசிய வாலிபால்: தமிழக அணி தேர்வு

தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்கும் தமிழக மாணவர் அணிக்கான வீரர்கள் தேர்வு புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி வரும் நவம்பர் மாதம் டேராடூனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அண்ணா வாலிபால் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களைச் சேர்ந்த 56 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிறப்பாக விளையாடிய 12 பேரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தமிழக அணிக்கு தேர்வு செய்தனர்.

அணி விவரம்: பி.சபரி, எம்.நிக்கில்சன், எஸ்.இளவழகர் (பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி), எம்.ஷேக்முகமது (ராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளி), டி.கெவின்ஷ்டன் (தூத்துக்குடி புனித லோக்கப் மேல்நிலைப் பள்ளி), எஸ்.வி.குருபிரசாந்த், இ.விக்னேஷ் (திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளி), இ.கார்த்திக் (தஞ்சாவூர் மேம்பாலம் மேல்நிலைப் பள்ளி), பி.விக்னேஷ் (சென்னை வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி), எம்.சபரீஷ்குமார் (கோவை நானா மேல்நிலைப் பள்ளி), பி.சரவணகுமார், கே.அருண்பாண்டி (மதுரை தல்லாகுளம் அமெரிக்கன் பள்ளி).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE