நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 4-வது சுற்றில் வீழ்த்தி நார்வே செஸ் போட்டித் தொடரில் 3-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் கடைசி இடத்துக்குச் சென்றார்.

முதல் 3 போட்டிகளில் டிரா செய்த ஆனந்த், இந்த முறை வெற்றிக்காக முனைப்பு காட்டி ஆடினார். வெள்ளைக்காய்களில் தனது நகர்த்தலிலும் தடுப்பாட்டத்திலும் சாதுரியம் காட்டிய ஆனந்த் வெற்றியைச் சாதித்தார்.

வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் தொடக்கத்தில் பழைய கால தடுப்பு உத்தியை மேற்கொண்டர். அதாவது தொடக்கத்தில் ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நகர்த்த கார்ல்சென் அதற்கு நேராக உள்ள தனது சிப்பாயைக் கொண்டு வந்து நிறுத்தி முட்டுக்கட்டை போட ஆனந்த் வலதுபுறம் உள்ள குதிரையை இடப்புறமாக நகர்த்தினார்.

கார்ல்செனும் தனது வலதுபக்க குதிரையை இடப்புறமாக வெளியே கொண்டு வந்தார். உடனே ஆனந்த் வெள்ளைக் கட்டத்தில் இருந்த தனது பிஷப்பை 4 கட்டங்கள் குறுக்காக முன்னேற்றி கார்ல்செனின் எல்லைக்குள் நுழைந்து விடுவதாக அச்சத்தை ஏற்படுத்தினார். ஆனால் கார்ல்சென் தனது வலப்புற யானைக்கு முன்னால் உள்ள சிப்பாயை ஒரு கட்டம் நகர்த்தி ஆனந்தை மிரட்டினார். இவரும் பின்னால் வந்தார்.

அதன் பிறகு சிப்பாய்களின் ஆதிக்கம் தொடர இருவரது நகர்த்தல்களும் முட்டுக்கட்டை நிலைக்கு வந்தன. ஆட்டத்தின் 17-வது நகர்த்தலில் ஆனந்த் தனது கறுப்பு கட்ட பிஷப்பை குறுக்கக வலப்புறமாக 4 கட்டங்கள் நகர்த்தி ஒருமுடிவுடன் கார்ல்செனின் எல்லைக்குள் சென்றார். 21-வது நகர்த்தலில் ஒரு அச்சுறுத்தலுக்காக தனது குதிரை ஒன்றை வலது மூலைக்கு அவரது எல்லைக்கு கொண்டு சென்றார் ஆனந்த். அதாவது கார்ல்சென் பிஷப்பால் குதிரையை வெட்டியாக வேண்டும், அப்படி வெட்டினால் அவரது பிஷப்பை காலி செய்ய ஏற்கெனவே தனது பிஷப்பை அங்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆனந்த் குதிரையையும் கார்ல்சென் பிஷப்பையும் இழந்தனர்.

அடுத்த நகர்த்தலில் கார்ல்சென் ஆனந்தின் இடப்புற யானைக்கு நேராக 3 கட்டங்களில் இருந்த சிப்பாயை வீழ்த்தினார். ஆனந்த் யானையை ஒரு கட்டம் முன்னேற்ற கார்ல்சன் வெட்டுபடுவதற்காகவே தனது சிப்பாயையும் ஒரு கட்டம் நகர்த்தி யானைக்கு நேராக நிறுத்தினார். ஆனால் தனது சிப்பாயால் ஆனந்த் அவரது சிப்பாயை வெட்டித்தள்ளினார்.

27-வது மூவில் கார்ல்சென் தனது குதிரையை அதிக ரிஸ்குடன் ஆனந்தின் இடப்புற யானையை காலி செய்ய குறிவைத்து நகர்த்தினார். ஆனால் இந்த நடைமுறையில் ஆனந்த், கார்ல்செனின் குதிரையை காலி செய்ய, கார்ல்சென் ஆனந்தின் முக்கியமான பிஷப்பை வெட்டினார். அதன் பிறகு தனது பவர் காய்களை ராஜா இருக்கும் வலப்புறத்துக்கு கொண்டு வந்தார் ஆனந்த். 30-வது மூவில் ராணியை வெளியே எடுத்தார் ஆனந்த். கார்ல்சென் குதிரையால் செக் வைத்தார்.

அப்போது ஆனந்த் தடுப்பாக ராணியைக் காப்பாற்ற கார்ல்சென் தனது வெள்ளைக் கட்ட பிஷப்பை, ஆனந்தின் யானையை குறிவைக்குமாறு ஒரு நகர்த்தலை மேற்கொண்டார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக எஃப்-3 யில் இருந்த ஆனந்தின் யானையை கார்ல்சென் பி5-யில் இருந்த தனது பிஷப்பால் அகற்றினார். ஆனால் ஆனந்துக்கு சுலபமாக பிஷப்பை அகற்ற முடிந்தது, காரணம் ஏற்கெனவே எஃப்2வில் நிறுத்தியிருந்த யானையை ஒரு கட்டம் பின்னால் நகர்த்தி கார்ல்செனின் இன்னொரு பிஷப்பையும் பறிமுதல் செய்தார். இப்போது கார்ல்சன் வசம் ஒரு ராணி, 2 யானை, ஒரு குதிரை 6 சிப்பாய்கள் எஞ்சியிருந்தன.

மேலும் ஓரிரண்டு சிப்பாய்கள் பரிமாறிக் கொள்ளப்பட ஆனந்த் எச்5 நிலைக்கு தனது ராணியை முன்னேற்றினார். கார்ல்சென் உடனே தனது ராஜாவை இடது மூலைக்கு கொண்டு சென்றார். பிஷப்பை ராஜாவுக்கு அருகே கொண்டு சென்று ஆனந்த் செக் வைக்க, கார்ல்சன் யானையால் ஆனந்தின் பிஷப்பை வெட்டினார். ஆனால் கார்ல்சனின் யானையைக் காவு வாங்க காத்திருக்கும் ஆனந்தின் சிப்பாயைக் கவனிக்கவில்லை, ஆனந்த் முறையாக யானையை பலிவாங்கினார். இதில் இவரது சிப்பாயும் கார்ல்சனின் ராணியினால் வெட்டப்பட்டது. ஆட்டம் உச்சக் கட்டத்தை நெருங்கியிருந்தது.

இந்நிலையில் இருவருக்கும் வேறு வழி ஏற்படவில்லை, வலது மூலையில் இருந்த ராணியை இருவரும் வெட்டிக்கொண்டனர். இருவரது ராணியும் காலி.

இப்போது ஆனந்திடம் ராஜா, ஒரு யானை, ஒரு குதிரை 5 சிப்பாய்கள் மட்டுமே இருந்தது. அவரிடமும் இதே பவர்களே எஞ்சியிருந்தன. அப்போது கார்ல்சனின் யானையக் குறிவைத்து ஆனந்த் தனது குதிரையை நகர்த்த இதனை கார்ல்சன் கோட்டைவிட்டது அதிசயமாகவே இருந்தது. அவர் தனது ராஜாவை ஒரு கட்டம் முன்னேற்றி யானைக்கு காவலிட்டார். ஆனால் மீண்டும் இருவெட்டுகள், ஆனந்த் குதிரையால் யானையைக் காலி செய்ய, கார்ல்சன் தன் ராஜாவினால் ஆனந்தின் குதிரையை அகற்றினார். அடுத்ததாக எஃப்3யில் இருந்த தனது யானையை கார்ல்சன் முனையில் உள்ள எஃப்3-யிற்கு நகர்த்தினார் ஆனந்த். பிறகு ராஜாவையும் தனது யானைக்கு நேராக கொண்டுவர, கார்ல்சனின் ராஜா முடங்கியது. ஆட்டம் முடிந்தது ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஆனந்தின் வெற்றியை செஸ் நட்சத்திரம் கேரி காஸ்பரோவ் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்