ஒருநாள் ஆட்டம் டெல்லிக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

ஒடிசா பாரபட்டி மைதானத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அக்டோபர் 22ம் தேதி டெல்லியில் நடைபெறவிருந்த டி20 போட்டி பாரபட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பெஹெரா கூறுகையில், “அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு அக்டோபர் 13-ம் தேதி முதல் புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக இங்குள்ள அனைத்து ஹோட்டல்களில் உள்ள அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. நாங்கள் அணி வீரர்களுக்கான ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துவிட்டோம். ஆனால் மற்ற நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு 250 அறைகள் தேவைப் படுகின்றன. அது கிடைக்காததால் போட்டி மாற்றப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE