இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்) வரும் 30-ம் தேதிக்குள் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவருக்கு பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வர்மா கூறுகையில், “ கடந்த 86 ஆண்டுகளாக பிசிசிஐயின் ஏஜிஎம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த முறையும் 30-ம் தேதிக்குள் ஏஜிஎம்மை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது சார்பாக எனது வழக்கறிஞர் சந்திரசேகர் வர்மா, சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் நகல் ஐபிஎல் முறைகேடு குறித்து விசாரித்து வரும் முத்கல் கமிட்டிக்கும் அனுப்பப்ப