பேட்டிங், பந்து வீச்சுக்கு சமநிலையில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் வேண்டும்: ஷர்துல் தாக்குர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்​டிங், பந்துவீச்​சுக்கு சம அளவில் கைகொடுக்​கும் ஆடு​களங்​கள் அமைக்​கப்பட வேண்​டும் என லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​டர் ஷர்​துல் தாக்​குர் கூறி​யுள்​ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தனது முதல் வெற்​றியை பதிவு செய்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது.

லக்னோ அணி சார்​பில் ஷர்​துல் தாக்​குர் 4 ஓவர்​களை வீசி 34 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 191 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி நிகோலஸ் பூரன், மிட்​செல் மார்ஷ் ஆகியோரது அதிரடி​யால் 16.1 ஓவரிலேயே 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 193 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஆட்ட நாயக​னாக ஷர்​துல் தாக்​குர் தேர்​வா​னார்.

போட்டி முடிவடைந்​ததும் ஷர்​துல் தாக்​குர் கூறும்​போது,“இந்த வகை​யான ஆடு​களங்​கள் பந்​து​வீச்​சாளர்​களுக்கு சிறிது கைகொடுக்​கும் என்று நான் நினைக்​கிறேன். பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் பந்​து​வீச்​சாளர்​களுக்கு ஆட்​டம் சமநிலை​யில் இருக்​கும் வகை​யில் ஆடு​களங்​கள் தயாரிக்​கப்பட வேண்​டும் என கடந்த ஆட்​டத்​தின்​போதே கூறினேன். இம்​பாக்ட் பிளேயர் விதி இருப்​ப​தால் 240 முதல் 250 ரன்​கள் குவிக்​கப்​படு​வது பந்து வீச்​சாளர்​களுக்கு நியா​யம் சேர்ப்​ப​தாக இல்​லை” என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்