கொல்கத்தா: ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் வீரர்கள் மட்டுமல்லாது நடிகர் ஷாருக்கான், பாடகர் ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி என பாலிவுட் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
வண்ணமயமான ஒளிவிளக்குகளின் மாயாஜாலம் மற்றும் பட்டாசுகள் வாணவேடிக்கை உடன் முதல் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ‘உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் நிகழ்வு’ என ஐபிஎல் கிரிக்கெட்டை ஷாருக்கான் தெரிவித்தார். அவர் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் இன்று காலை மழை பொழிவு இருந்த நிலையில் மாலையில் அது விலகிய சூழலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்திருந்தனர்.
பாடகர் ஸ்ரேயா கோஷல் தனது ஹிட் பாடல்களை பாடி அசத்தினார். குறிப்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் அனைவரையும் ஈர்த்தது. கரண் அவுஜ்லா தனது பஞ்சாபி பாடல்களை பாடி அசத்தினார். திஷா பதானி நளினம் பொங்க நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார். அனைத்துக்கும் மேலாக ‘கிரிக்கெட் உலகின் அரசன்’ என கோலியை குறிப்பிட்டார் ஷாருக்கான். அவர்கள் இருவரும் மேடையில் இணைந்து நடனமாடி இருந்தனர்.
» பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
» ஸ்டாலின் கூட்டிய தொகுதி மறுவரையறை ஜேஏசி கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஆதரவு!
@shreyaghoshal at her very best in the #TATAIPL 2025 mega celebration!
— Star Sports (@StarSportsIndia) March 22, 2025
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar #KKRvRCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/dpnpPdlPSr
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago