ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, பஞ்சாப் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் எஃப்சி 19 ஆட்டங்களில் விளையாடி 24 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி 20 ஆட்டங்களில் விளையாடி 21 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி (31) அணியை விட சென்னையின் எஃப்சி அணிக்கு 10 புள்ளிகளும், பஞ்சாப் எஃப்சி அணி 7 புள்ளிகளும் பின்தங்கி உள்ளன. இரு அணிகளும் பிளே பிளே ஆஃப் சுற்றை நெருங்க வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும்.
மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி கடந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை வீழ்த்தியிருந்தது. கடந்த அக்டோபர் 31, 2024-ல் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது பஞ்சாப் எஃப்சி. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
எனினும் சென்னையின் எஃப்சி தனது சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தவில்லை. சென்னை நேரு விளையாட்டரங்கில் அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 2 டிராவையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
» காலவரையற்ற வேலை நிறுத்தமா? - கேரள தயாரிப்பாளர்கள் மோதல்
» ‘இதயம் முரளி’ மூலம் இயக்குநர் ஆனார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
ஆனாலும் பஞ்சாப் எஃப்சியின் டிபன்ஸ் பலவீனத்தை பயன்படுத்தி சென்னையின் எஃப்சி அணி சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வகையில் வலுவான செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
இரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னையின் எஃப்சி ஒரு ஆட்டத்திலும், பஞ்சாப் எஃப்சி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago