இந்தியா - மலேசியா ஆட்டம் டிராவில் முடிந்தது

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்தியா- மலேசியா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீயிலான சர்வதேச கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மலேசியோ முதல் கோலை அடித்தது. தொலை தூரத்தில் அடிக்கப்பட்ட பந்தை இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பாக்ஸ் பகுதியையும் தாண்டியபடி பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் பந்தை அவர் தவறவிட, பக்கவாட்டில் நின்ற மலேசிய வீரர் பவுலோ ஜோஷ் கோல் வலைக்குள் பந்தை திணித்தார். இதனால் மலேசியா 1-0 என முன்னிலை பெற்றது.

19-வது நிமிடத்தில் இந்திய வீரர் பிரண்டன் கார்னரில் இருந்து அடித்த பந்தை ராகுல் பெக்கே தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. இதன் பின்னர் கடைசி வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்