அட்யா பட்யாவில் இந்திய அணிகள் சாம்பியன்

By செய்திப்பிரிவு

சென்னை: 8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன.

இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார், அரவிந்த், மதுமிதா, ஜோஷிகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேவளையில் அணியின் மேலாளராக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பாலாஜி செயல்பட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE