சென்னை: 8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன.
இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமார், அரவிந்த், மதுமிதா, ஜோஷிகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேவளையில் அணியின் மேலாளராக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பாலாஜி செயல்பட்டிருந்தார்.