எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி‘ பிரிவில் கர்நாடகா, இந்தியன் ஆயில், என்சிஓஇ போபால், மத்திய தலைமைச் செயலகம், ஒடிஷா ஆகிய அணிகள் உள்ளன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் 2 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 28-ம் தேதி அரை இறுதிபோட்டியும் 29-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE