ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

By செய்திப்பிரிவு

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின.

இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் உத்தம் சிங் (13-வது நிமிடம்), ஜர்மான்பிரீத் சிங் (32-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (19 மற்றும் 45-வது நிமிடங்கள்) இரு கோல்களும் அடித்தனர்.

தென் கொரியா சார்பில் 33-வது நிமிடத்தில் யாங் ஜிஹூன் ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE