கயானா: மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் கயானாவில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 144 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தில் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் அந்த அணி 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.