புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 12 அணிகள் கலந்து கொண்டுள்ள புச்சிபாபு கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தமிழகத்தில் இருந்து டிஎன்சிஏ பிரசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் ஆகிய இரு அணிகள் கலந்து கொள்கின்றன.

டிஎன்சிஏ பிரசிடெண்ட் லெவன் தனது முதல் ஆட்டத்தில் (ஆக.21 முதல் 24 வரை) இந்தியன் ரயில்வேஸ் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் (ஆக.27 முதல் 30 வரை) குஜராத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு ஆட்டங்களும் சேலத்தில் நடைபெறுகிறது. அதேவேளையில் டிஎன்சிஏ லெவன் தனது முதல் ஆட்டத்தில் (ஆக.21 முதல் 24 வரை) ஹரியானாவுடனும், 2-வது ஆட்டத்தில் (ஆக.27 முதல் 30 வரை) மும்பையுடனும் மோதுகிறது. இந்த ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஎன்சிஏ பிரசிடெண்ட் லெவன்: சித்தார்த் (கேப்டன்), விமல் குமார், ராதாகிருஷ்ணன், பத்ரிநாத், முகமது அலி, அன்ட்ரே சித்தார்த். மாதவ பிரசாத், ரித்திக் ஈஸ்வரன், முகமது அலி, விக்னேஷ், பிரவின், ஜாதவேத் சுப்ரமணியன், குர்ஜப்னீத் சிங், லோகேஷ் ராஜ், கிஷோர், ஹெம்சுதேஷன்.

டிஎன்சிஏ லெவன்: சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ், ரஞ்ஜன் பால், மோகித் ஹரிகரண், அஜிதேஷ், பாபா இந்திரஜித், பூபதி வைஷ்ண குமார், லோகேஷ்வர், அதிஷ் சோனு யாதவ், வித்யுத், லக்சய் ஜெயின், அஜித் ராம், கோவிந்த், அச்யுத், திரிவோக் நாக், யுரீஸ்வான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE