ஆக.15-ல் சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆகஸ்ட் 15 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் 54-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் வாயிலாக வரும் செப்டம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இருபாலருக்கும் மொத்தம் 48 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதி 16, 20 வயதுக்கு உட்பட்டோருக்கும் 12, 14 மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதியும் போட்டிகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE