“தலைநிமிருங்கள் போராளியே!” - வினேஷ் போகத்துக்கு நயன்தாரா ஆறுதல்!

By செய்திப்பிரிவு

சென்னை: “உங்களின் மதிப்பு வெற்றிகளால் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கிடைத்துள்ளது.அது எந்தவொரு சாதனையையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு ஆழமான அன்பு” என்று வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “தலைநிமிருங்கள் போராளியே. நீங்கள் ஏராளமானோருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்களின் மதிப்பு வெற்றிகளால் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கிடைத்துள்ளது. அது எந்தவொரு சாதனையையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு ஆழமான அன்பு. தலையை நிமிர்த்தி அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE