ஒலிம்பிக் குத்துச்சண்டை: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரீத்தி

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியின் குத்துச்சண்டை பிரிவு (54 கிலோ) கால் இறுதிக்கு இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் தகுதி பெற்றுள்ளார். நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார், வியட்நாம் வீராங்கனை வோ தி கிம்முடன் மோதினார்.

இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், கொலம்பியா வீராங்கனை யெனி அரியாஸைச் சந்திக்கவுள்ளார்.

வில்வித்தையில் இந்திய அணி ஏமாற்றம்: மகளிர் வில்வித்தை அணிப் பிரிவில் இந்திய அணி தோல்வி கண்டது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அங்கிதா பகத், பஜன் கவுர், தீபிகா குமாரி ஆகியோர் அடங்கிய அணி 51-52, 29-54, 48-54 என்ற கணக்கில், நெதர்லாந்து அணியிடம் தோல்வி கண்டது. வில்வித்தையில் பதக்கம் வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE