பாரிஸ் ஒலிம்பிக்: மணிகா பத்ரா, நிகாத் ஜரீன் வெற்றி

By செய்திப்பிரிவு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மணிகா பத்ரா 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் கிரேட் பிரிட்டன் வீராங்கனை அன்னா ஹர்சியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதே போல் மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றி பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனை மேக்ஸி கரீனா குளோயட்சரை வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE