முதல் டி 20-ல் இந்தியா - இலங்கை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

பல்லேகலே: இந்தியா - இலங்கை அணிகள்இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின்முதல் ஆட்டம் பல்லேகலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடராக அமைந்துள்ளது.

அடுத்த டி 20 உலகக் கோப்பைதொடர் 2026-ம் ஆண்டு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியை தற்போது இருந்தே கட்டமைக்க வேண்டிய சூழ்நிலை இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE