இலங்கை உடனான ஒருநாள் தொடரில் பாண்டியா விலகல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்டதொடரில் விளையாட உள்ளது.

இதில் டி20 தொடர் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2-ம் தேதி ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதேவேளையில் ஒருநாள் போட்டித்தொடரில் அவர் விளையாடமாட்டார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சொந்த காரணங்களுக்காகவே அவர், ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாகவும் மற்றபடி அவருக்கு எந்தவித உடற்தகுதி பிரச்சினையும் இல்லை எனவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE