பொறியியல் கல்லூரி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி சார்பில் 13-வது நினைவு மஞ்சுளா முனிரத்தினம் பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இன்று முதல் (ஏப்ரல் 1) வரும் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இப்போட்டிகள் ஆர்எம்கே கல்லூரி வளாக மைதானங்களில் நடைபெறும். போட்டியில் ஆர்எம்கே, லயோலா, சத்யபாமா, அண்ணா பல்கலை, எஸ்விசிஇ, வேலம்மாள், கிண்டி சிப்பெட், ஜேப்பியார், சவிதா, விஐடி, பனிமலர், எஸ்ஆர்எம் உள்ளிட்ட 16 கல்லூரி, பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கவுள்ளன.

20 ஓவர் போட்டிகளாக இதுநடைபெறும். இறுதிப் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. பரிசளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE