3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

By செய்திப்பிரிவு

பிராக்: செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள ரவுண்ட் ராபின் மோதலில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 3-வது சுற்றில், ருமேனியாவின் ரிச்சர்ட் ராப்போர்ட்டை எதிர்த்து விளையாடினார்.

இதில் 33-வது காய் நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ், விதித் குஜராத்தி மோதினார்கள். இந்த ஆட்டம் 38-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவ், செக்குடியரசின் டேவிட் நவராவை வீழ்த்தினார். இந்த மோதலில் 36-வது காய் நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார் நோடிர்பெக் அப்துசட்டரோவ்.

ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ மோதிய ஆட்டம் 33-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. செக்குடியரசின் நுயென் தான் டாய் தனது 3-வது சுற்றில் போலந்தின் மாட்யூஸ் பார்டெல்லை 82-வது நகர்த்தலின் போது தோற்கடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

21 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்